News February 22, 2025
முன்னாள் ராணுவ துணைத் தளபதி காலமானார்

இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி மோதி தார் காலமானார். 1995 முதல் 1996 வரை துணை ராணுவத் தளபதியாக பதவி வகித்துள்ள அவர், அதற்கு முன்பு தென்பிராந்திய படைகளின் தளபதியாக 1994-1995 வரை இருந்துள்ளார். 1965 பாேர், 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1971 போரில் அவர் காயமும் அடைந்தார். புனேவில் வசித்து வந்த தார் (88), முதுமை காரணமாக காலமானார்.
Similar News
News February 23, 2025
திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பல்..

திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பலை தலைமை ஏற்க வருக! வருக! என சசிகலாவுக்கு ஆதரவாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் டிரெண்டாகி வருகிறது. அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வழக்கு, முன்னாள் அமைச்சர்களின் அதிருப்தி என மீண்டும் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான நாளை(பிப்.24) சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News February 23, 2025
மெரினாவுக்கு போங்க: பீச்சு; மேட்சு ரெண்டும் பார்க்கலாம்!

இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சென்னை மக்கள் காண விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மாலையில் மெரினாவுக்கு சென்றுவிட்டால் போதும், லைவ்வாக மேட்ச்சை கண்டுகளிக்கலாம். இதற்காக மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரிலும், பெசன்ட் நகரில் போலீஸ் பூத் அருகிலும் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மெரினா செல்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
News February 23, 2025
‘டிராகன்’ நாயகியின் கல்யாண கண்டிஷன்கள்

‘டிராகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள கயாடு லோஹர் (24), தன்னை திருமணம் செய்து கொள்வதற்கான கண்டிஷன்களை பகிர்ந்துள்ளார். அதில், தன்னை மட்டுமே அதிகமாக நேசிக்கக் கூடியவராக இருக்க வேண்டும் எனவும், அவருடைய அன்பு கொஞ்சம் கூட மற்றவருக்கு போகக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நேர்மையானவராக, தனக்காக கதவு திறந்துவிடுவது போன்ற சின்ன சின்ன சேவகங்களை செய்ய வேண்டும் எனவும் கண்டிஷன் போட்டுள்ளார்.