News March 29, 2024

அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப்பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Similar News

News August 10, 2025

கிருஷ்ணகிரி: வங்கியில் வேலை.. ரூ.93,000 வரை சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு MBA, MMS, PGDBA, PGDBM முடித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட்.25ம் தேதி கடைசி ஆகும். நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 10, 2025

கிருஷ்ணகிரி கிரிக்கெட் ரசிகர்கள் குஷி!

image

பெங்களூரை விட ஓசூருக்கு அருகில் கர்நாடகாவின் புதிய கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளதால் தமிழக ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 1650 கோடி ரூபாயில் பொம்மசந்திராவில் கட்டப்படும் இந்த மைதானம் 80000 பேர் அமரக்கூடியது. ஓசூரில் இருந்து வெறும் 19 கிமீ தூரம் என்பதால் தமிழ்நாட்டிலிருந்து அரை மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் பெங்களூரில் இருந்து 25 கிமீ, விமான நிலையத்திலிருந்து 80 கிமீ தூரம் உள்ளது.

News August 10, 2025

கிருஷ்ணகிரியில் விமான நிலையம் அமையும் இடம் மாற்றம்?

image

ஓசூர், சூளகிரியை தவிர்த்து பர்கூர்-போச்சம்பள்ளி தாலுகாவிற்கு இடையே புதிய விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். கர்நாடகாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ சுற்றளவிற்கு வேறு விமான நிலையம் அமைக்கக்கூடாது. ஆனால் ஓசூர்,75 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் ஓசூரில் விமான நிலையம் வந்தால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். உங்கள் கருத்தை பதிவு செய்து மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!