News February 22, 2025
BREAKING: 4 நாட்கள் வக்கீல்கள் ஸ்டிரைக்

தமிழகம் முழுவதும் வரும் 26 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப் போவதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர். தமிழக, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர் சட்டத் திருத்த வரைவு மசோதா-2025ஐ மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி ஸ்டிரைக்கில் ஈடுபடவும், 26ஆம் தேதி நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 23, 2025
ரயில்களில் தலையணை, பெட்ஷீட் திருடினால்..?

யாருக்கு தெரியப்போகுது என ட்ரெயினில் பயணிக்கும் போது, தலையணை – பெட்ஷீட்களை திருடினால் என்ன தண்டனை என தெரியுமா? ரயில்வே சொத்துச் சட்டம், 1966 இன் படி, திருடிய பொருட்களுடன் பிடிபட்டால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம் விதிக்கப்படும். ட்ரெயின்களின் ஏசி கோச்களில் வழங்கப்படும் தலையணை திருடுபோனால், அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தமும் செய்யப்படுகிறதாம்.
News February 23, 2025
அப்பாவான OpenAI CEO சாம்

OpenAI CEO சாம் ஆல்ட்மேனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே பிறந்துள்ளதால், NICUவில் வைத்து பராமரிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், இருப்பினும் குழந்தை ஆக்டிவ்வாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். சாம் தனது நீண்ட நாள் காதலியான ஆலிவரை, கடந்த 2024ல் திருமணம் செய்தார்.
News February 23, 2025
போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் நேற்று முன்தினம் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.