News February 22, 2025
ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம்

தென்காசி, சாம்பவர் வடகரை பகுதியில் ஊர் நிர்வாகம் 8 குடும்பங்களுக்கு பல லட்ச ரூபாய் அபதாரம் விதித்துள்ளனர். அபராதம் கட்ட தவறியதால் 8 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டனர். அதை எதிர்த்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டம் நடத்தியதால் அனைவரும் கைது செய்யப்பட்டு தாய்ப்பாலா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News September 29, 2025
தென்காசி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாம்பவர்வடகரையில் இன்று பெரியகுளம் ரோட்டில் இருசக்கர வாகன விபத்தில் பேஷன் டிசைனர் டெய்லர் முகம்மது மைதீன் விபத்து ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யபட்டு பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சாம்பவர்வடகரை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 29, 2025
தென்காசி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
News September 29, 2025
தென்காசி: மீண்டும் ஒற்றை யானை வருகை!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை தாலுகா வடகரை பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளன. தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அவ்வப்போது சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒற்றை யானை ஒன்று நேற்று இரவு மீண்டும் தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திய யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.