News February 22, 2025

26 நகை கடைகளின் மீது நடவடிக்கை

image

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் எம்.வெங்கடாசலபதி தலைமையில் திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் பகுதிகளில் உள்ள நகை கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. 26 நகைக்கடைகளில் தராசுகள் மற்றும் எடைகளுக்கு முத்திரையிடப்படாததும், சான்று வழங்கப்படாததும் கண்டறியப்பட்டது. இதன் பேரில் கடை உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 21, 2025

திருவள்ளூரில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

image

▶ திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்
▶ திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்
▶ திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயில்
▶ பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில்
▶ கூவம் திரிபுராந்தகர் கோயில்
▶ தி.கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில்
▶ திருத்தணி முருகன் கோயில்
▶ ஸ்ரீ வீரராகவ சுவாமி கோயில்
▶ பவானி தேவி கருமாரியம்மன் கோயில்
▶ பவானி அம்மன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

திருவள்ளூரில் வாட்டி வதைக்கும் வெயில்

image

திருவள்ளூரில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!