News February 22, 2025
‘APPA’ செயலியை அறிமுகம் செய்த CM ஸ்டாலின்

பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் APPA(Anaithu Palli Parents teachers Association) செயலியை CM ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி மூலம் அரசுப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்களுக்கான தேவைகளை இதில் பதிவிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக முதல்வர் ஸ்டாலினை ‘அப்பா’ எனக் குறிப்பிட்டு போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.
Similar News
News February 23, 2025
கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கில் மார்ச் 5இல் தீர்ப்பு

சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய கார்த்தி சிதம்பரம் மனு மீது மார்ச் 5ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. 2022இல் வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், தீர்ப்பை மார்ச் 5ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.
News February 23, 2025
கங்கை நதியின் அதிசய சக்தி.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கங்கை நதி பிற நன்னீர் நதிகளை விட 50 மடங்கு வேகமாக கிருமிகள் மற்றும் மாசுபடுத்திகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று நீரியல் நிபுணர் அஜய் சோன்கர் கூறி தெரிவித்துள்ளார். நன்னீர் நதியான கங்கையில், 1,100 வகையான இயற்கையான பாக்டீரியா கொல்லிகள் (பாக்டீரியோபேஜ்) உள்ளதாகவும், இவை மாசுபாட்டை நீக்கி, அவற்றின் எண்ணிக்கையை விட 50 மடங்கு அதிகமான கிருமிகளை கொன்று சுத்திகரிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
News February 23, 2025
ஹிட்லரின் மறு உருவம் ஜக்தீப் தன்கர்: TKS இளங்கோவன்

தன்னை கொடுங்கோலராக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் காட்டிக்கொள்வதாக திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார். ஹிட்லரின் மனப்பான்மையை தன்கரின் பேச்சு காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, ஒரு நிலத்தை கைப்பற்ற அதன் மொழியையும், கலாச்சாரத்தையும் அழிக்க வேண்டும் என தன்கர் பேசியிருந்தார்.