News March 29, 2024
ஒடுகத்தூர் சந்தையில் 8 லட்சம் வர்த்தகம்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் (மார்ச் 29) இன்று நடந்த சந்தையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான ஆடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் இன்று மட்டும் 8 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News March 8, 2026
வேலூர்: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

சென்னை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.
News March 8, 2026
காட்பாடியில் வெல்லப்போவது யார்?

நடைபெறவிருக்கும் தேர்தலில் காட்பாடி தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில்,1996 முதல் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வெற்றி வாகை சூடி வருகிறார். ஆனால்,கடந்த 2021 தேர்தலில் அதிமுக – திமுக இடையேயான கடும் போட்டிக்கு மத்தியில், 776 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே துரைமுருகன் வென்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் காட்பாடி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
News March 8, 2026
வேலூரில் அதிரடி கைது

வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பம் பகுதியில் கே.வி.குப்பம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கஞ்சா பொட்டலங்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பிரவீன்குமார் (20), திலீப் (26), சந்தோஷ்குமார் (34) ஆகிய 3 பேரை கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


