News February 22, 2025
சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி கயத்தாரைச் சேர்ந்த ஜானகிராமன் புதுச்சேரியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமியை ஜானகிராமன் அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 20 ஆண்டுகள் தண்டனை விதித்தது.
Similar News
News September 24, 2025
விழுப்புரத்தில் வாகன ஏலம்

விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில், போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் செப்.26 அன்று காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகிறது. இதில் 17 நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 85 இரு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 104 வாகனங்கள் உள்ளன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ரூ. 2000 டோக்கன் கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 24, 2025
திண்டிவனம் அருகே சடலத்துடன் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியில் நடந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அவரது உடலுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலகியது. இதையடுத்து, காவல்துறையினர் வந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
News September 24, 2025
‘கிராமம் தோறும் மக்கள் சந்திப்பு’

ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ‘கிராமம் தோறும் மக்கள் சந்திப்பு’ என்ற நிகழ்ச்சியை தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அக்டோபர் 4ம் தேதி ராமதாஸ் தொடங்குகிறார்.