News March 29, 2024

மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி திடீர் சாவு

image

நெல்லை: தருவை அருகே புது காலனியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மதன் நேற்று (மார்ச் 28 ) காலை திடீரென்று நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 5, 2026

நெல்லை: துணை முதல்வர் இன்று வருகை

image

நெல்லை மாவட்டம், பாளை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாலை 4.30 மணிக்கு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News March 5, 2026

நெல்லை: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

image

நெல்லை டவுன் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த மாரியப்பன்(19) என்பவர் புகழேந்தி தெருவில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 220 கிராம் எடை உள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பன் என்பவரை கைது செய்தனர்.

News March 5, 2026

திருநெல்வேலி: இன்று புதிய அரசு மருத்துவமனை திறப்பு

image

திருநெல்வேலி வள்ளியூரில், அதிநவீன அறுவை சிகிச்சை கூடம், EGC, CT SCAN, X-RAY உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரூ.30 கோடி மதிப்பில், அரசு தலைமை மருத்துவமனை, புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை, இன்று (மார்ச்.05) மாலை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறக்கவுள்ள நிலையில், நேற்று(மார்ச். 4) காலை, சபாநாயகர் அப்பாவு, மாவட்டஆட்சியர் சுகுமார் ஆகியோர் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!