News February 22, 2025
விண்கல்லை தகர்க்க நாசா திட்டம்

பூமியை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருக்கும் ’2024 YR4′ விண்கல்லை வானிலேயே தகர்க்க நாசா திட்டமிட்டுள்ளது. 2032ஆம் ஆண்டு இந்த விண்கல் பூமியில் மோதுவதற்கு 1.5% வாய்ப்பு உண்டு. அப்படி மோதினால், ஒரு நகரமே அழியும் என்றும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த விண்கல் பூமியில் மோதும் வாய்ப்பு அதிகரித்தால் நாசா அதனை வானிலேயே வெடிக்கச் செய்யும்.
Similar News
News February 22, 2025
இரவு 10 மணிக்கு மேல் இந்தப் படம் பார்க்குறீங்களா?

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க
News February 22, 2025
பாக்.கிற்கு எதிராக கோலி நாளை விளையாடுவாரா?

CT போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியில், கோலி, ராேஹித் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதி. ஆனால் கோலியின் இடதுகாலில் ஐஸ் பேக் கட்டப்பட்டது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு காலில் காயமா? நாளை அவர் விளையாடுவாரா? என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
News February 22, 2025
சட்டத்திற்குள் அடங்காத தமிழ்நாடு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தே தமிழ்நாடு சிறப்பு விதிவிலக்கு பெற்றிருக்கிறது. எதில் தெரியுமா? இந்தியாவிற்கான அலுவல் மொழிகள் விதிகள் 1963ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அதில் இரண்டாவது வரியிலேயே, “இந்த விதிகள், தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதிற்கும் பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு மட்டும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்று அன்றே சட்டம் இயற்றப்பட்டது.