News February 22, 2025
கேரள பாஜக தலைவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுப்பு

தொலைக்காட்சி விவாதத்தில் இந்திய முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் எனக்கூறிய கேரள பாஜக தலைவர் PC ஜார்ஜுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இதே போன்ற வழக்கு ஒன்றில் கடந்த 2022இல் வழங்கப்பட்ட ஜாமின் நிபந்தனைகளை மீறி, மீண்டும் அவதூறு கருத்துக்களை தெரிவிக்கும் இவருக்கு முன்ஜாமின் வழங்கினால், அது மக்களிடம் தவறான செய்தியை கொண்டு செல்லும் எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
Similar News
News February 22, 2025
IND-PAK நாளை மோதல்.. எந்த சேனலில் காணலாம்?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் நாளை துபாய் மைதானத்தில் மோதவுள்ளன. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ், நாளை மதியம் 2 மணிக்கு போடப்படும். பின்னர் அரை மணி நேரத்திற்கு பிறகு போட்டி தொடங்கும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரலையாகக் காணலாம். ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரலையாக போட்டியைக் காண முடியும்.
News February 22, 2025
அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 215 பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர் www.assamrifles.gov.in. இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 22ஆம் தேதி கடைசி நாளாகும்.
News February 22, 2025
100 பெண்களுடன் டேட்டிங்.. பலே ஆசாமி கைது

டெல்லியைச் சேர்ந்த மனோஜ் கல்யாண், திருமண செயலி மூலம் கிடைத்த எண்களை கொண்டு 100 பெண்களுடன் பழகியுள்ளார். காவலாளியான அவர், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி எனக் கூறி, திருமணம் செய்வதாக சொல்லி நம்ப வைத்துள்ளார். பின்னர் அவர்களிடம் இருந்து ஏடிஎம் அட்டை, கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ.3 கோடி வரை பணம் செலவழித்துள்ளார். 2 பெண்கள் அளித்த புகாரின்பேரில் விசாரித்த பாேலீஸ், கல்யாணை கைது செய்துள்ளது.