News February 21, 2025
கடைசி வரை போராடிய ரஹ்மத் ஷா

<<15538512>>CT<<>> கிரிக்கெட்டில் தெ.ஆப்பிரிக்க அணிக்கு கடைசி வரை ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன் ரஹ்மத் ஷா சிம்ம சொப்பனமாக இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த போதிலும், ரஹ்மத் ஷா அணிக்காக மல்லுக்கட்டினார். அரைசதம் அடித்த அவர், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 90 ரன்களில் அவர் அவுட் ஆனார். இத்துடன் ஆப்கானிஸ்தான் அணியும் சுருண்டது.
Similar News
News February 22, 2025
இரவு 10 மணிக்கு மேல் இந்தப் படம் பார்க்குறீங்களா?

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க
News February 22, 2025
பாக்.கிற்கு எதிராக கோலி நாளை விளையாடுவாரா?

CT போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியில், கோலி, ராேஹித் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதி. ஆனால் கோலியின் இடதுகாலில் ஐஸ் பேக் கட்டப்பட்டது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு காலில் காயமா? நாளை அவர் விளையாடுவாரா? என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
News February 22, 2025
சட்டத்திற்குள் அடங்காத தமிழ்நாடு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தே தமிழ்நாடு சிறப்பு விதிவிலக்கு பெற்றிருக்கிறது. எதில் தெரியுமா? இந்தியாவிற்கான அலுவல் மொழிகள் விதிகள் 1963ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அதில் இரண்டாவது வரியிலேயே, “இந்த விதிகள், தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதிற்கும் பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு மட்டும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்று அன்றே சட்டம் இயற்றப்பட்டது.