News February 21, 2025
ராஜஸ்தானில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

ராஜஸ்தானில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட் பேசுகையில், இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அமளி நிலவியது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் இரவு முழுவதும் அங்கேயே தங்குகின்றனர்.
Similar News
News February 22, 2025
“ரூ.10 ஆயிரம் கோடி தந்தாலும் அப்பாவத்தை செய்யமாட்டேன்”

எந்த மொழிக்கும் நாம் எதிரியல்ல. அதேநேரம் தேசிய புதிய கல்விக் கொள்கை என்பது சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை என விமர்சித்துள்ளார் CM ஸ்டாலின். கடலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ரூ.2,000 கோடி பணத்திற்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்து போட்டால், 2,000 ஆண்டுக்கு பின்னோக்கி தமிழ் சமுதாயம் போய்விடும். ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், அந்த பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்றார்.
News February 22, 2025
நைட்ல கண்டிப்பா பல் துலக்குங்க…

இரவில் உறங்கச் செல்லும் முன் கண்டிப்பாக பல் துலக்க வேண்டுமாம். இல்லையென்றால் இதய நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு எச்சரிக்கிறது. அதிலும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ரிஸ்க் அதிகம் என்கிறது அந்த ஆய்வறிக்கை. இரவில் உறங்கும்போது சாலிவா உற்பத்தி குறைந்து விடுவதால் பற்களில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்கள் எளிதாக உடலுக்குள் நுழைவதே இதற்கு காரணமாம்.
News February 22, 2025
முன்னாள் ராணுவ துணைத் தளபதி காலமானார்

இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி மோதி தார் காலமானார். 1995 முதல் 1996 வரை துணை ராணுவத் தளபதியாக பதவி வகித்துள்ள அவர், அதற்கு முன்பு தென்பிராந்திய படைகளின் தளபதியாக 1994-1995 வரை இருந்துள்ளார். 1965 பாேர், 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1971 போரில் அவர் காயமும் அடைந்தார். புனேவில் வசித்து வந்த தார் (88), முதுமை காரணமாக காலமானார்.