News March 29, 2024
குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.
Similar News
News December 27, 2025
கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி.. NEW UPDATE

கோவையில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி <<18678842>>கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி<<>> கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் மது போதையில் பிரதான் இருந்தபோது, அவரது மனைவி ஜிந்தி இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார். பிரதான் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தலைமறைவான ஜிந்தி தற்போது போலீசில் சிக்கியுள்ளார். அசாமைச் சேர்ந்த இந்த தம்பதி கோவையில் தங்கி பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
உடைகிறது ‘Event Management’ முதல்வரின் பிம்பம்: TVK

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை ஒடுக்கி, அட்டூழியத்தில் ஈடுபடுவதாக TVK அருண்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டங்களை நசுக்கும் செயல், அரசின் ‘விளம்பர மாடல்’ முகத்திரையை கிழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ‘Event Management’ மூலம், தன்னை முன்னிறுத்தும் CM-ன் பிம்பம் உடைத்து எறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
சற்றுமுன்: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹1,680 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹800 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 1 சவரன் தங்கம் ₹1,04,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹5,600 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இருக்காது.


