News March 29, 2024
குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.
Similar News
News September 19, 2025
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க, தினசரி சில உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் என்பதை மேலே உள்ள புகைப்படங்களில் குறிப்பிட்டுள்ளோம். படங்களை swipe செய்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த பயனுள்ள தகவலை உங்கள் அன்பானவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
News September 19, 2025
டெபாசிட் கட்டு.. பொதுக்கூட்டம் நடத்து: கோர்ட்

பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் அரசியல் கட்சிகளிடம் செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எந்த ஒரு பெரிய பொதுக்கூட்டங்களின் போதும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடப்பது உண்டு எனவும், அந்த இழப்பை ஈடுகட்ட பாதுகாப்பு தொகை வசூலிப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது. மேலும், இதற்கான விதிமுறைகளை போலீஸ் வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
News September 19, 2025
கோடீஸ்வர குடும்பங்கள் லிஸ்ட்: TN-க்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8.71 லட்சமாக உயர்ந்திருப்பது தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ல் 4.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை, தற்போது 90% அதிகரித்துள்ளது. 1.78 லட்சம் குடும்பங்களுடன், இந்திய கோடீஸ்வரர்களின் தலைநகராக மகாராஷ்டிரா விளங்குகிறது. தமிழ்நாடு 72,600 குடும்பங்களுடன் 3-ம் இடத்தில் உள்ளது.