News March 29, 2024
தாய்மொழியாக தமிழ் கிடைக்காததில் வருத்தம்

தாய்மொழியாக தமிழ் தனக்கு கிடைக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் இந்தியில் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். அதில் ‘தமிழில் பேச முடியவில்லையென்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை, ஊழல் அதிகரித்துள்ளது. மக்களுக்கு புதுப்புது பிரச்னையை உருவாக்குவதே திமுகவின் வேலையாக இருக்கிறது’ என பேசியுள்ளார்.
Similar News
News October 31, 2025
பொங்கல் பரிசாக ₹5,000?… அமைச்சர் குட் நியூஸ்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணியிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, CM ஸ்டாலின் இதுகுறித்து அறிவிக்க இருப்பதாக மகிழ்ச்சியான தகவலை அவர் தெரிவித்துள்ளார். இதனால், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
News October 31, 2025
பிஹாரிகளை தமிழக மண் காப்பாற்றுகிறது: RS பாரதி

பிஹார் மக்களை தமிழக மண் காப்பாற்றுவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சொந்த மாநிலத்திலேயே ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் பிஹார் மக்கள் ஏன் தமிழகத்திற்கு வரப்போகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழகம் வளமாக இருப்பதால் தான் பிஹார் மக்கள், இங்கே வருவதாகவும் அவர் பேசியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் பிஹார் மக்களை திமுக அரசு துன்புறுத்துவதாக PM மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.
News October 31, 2025
உலகளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்

உலக வன வள மதிப்பீடு 2025-ன் படி, இந்தியா உலகளவில், 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது வனப்பகுதியைப் பாதுகாக்கும் இந்தியாவின் உறுதியைக் எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஆண்டுதோறும் வனப்பரப்பை விரிவுபடுத்துவதில், இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த வனப்பகுதி 1,797 லட்சம் ஏக்கர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலக வனப்பகுதியில் சுமார் 2% ஆகும்.


