News February 21, 2025

இந்திய துணைக் குடியரசுத் தலைவருக்கு எம்பி பதில் கடிதம்

image

இந்திய துணை குடியரசுத் தலைவர் அனைத்து உலக தாய்மொழி நாளையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் தாய்மொழிகளில் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்திற்கு நேற்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுதியுள்ள பதில் கடிதத்தில், தமிழில் கடிதம் எழுதியதற்கு நன்றி எனவும், பாராளுமன்றத்தின் முக்கிய ஆவணங்களை எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் வழங்க வேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.

Similar News

News September 24, 2025

விழுப்புரத்தில் வாகன ஏலம்

image

விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில், போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் செப்.26 அன்று காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகிறது. இதில் 17 நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 85 இரு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 104 வாகனங்கள் உள்ளன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ரூ. 2000 டோக்கன் கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 24, 2025

திண்டிவனம் அருகே சடலத்துடன் சாலை மறியல்

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியில் நடந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அவரது உடலுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலகியது. இதையடுத்து, காவல்துறையினர் வந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

News September 24, 2025

‘கிராமம் தோறும் மக்கள் சந்திப்பு’

image

ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ‘கிராமம் தோறும் மக்கள் சந்திப்பு’ என்ற நிகழ்ச்சியை தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அக்டோபர் 4ம் தேதி ராமதாஸ் தொடங்குகிறார்.

error: Content is protected !!