News February 21, 2025

போன் செய்து உடனே அதிரடி காட்டிய தூத்துக்குடி கலெக்டர்!

image

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் டிஏபி உரம் இல்லை என கூறுவதாக, விவசாய சங்க நிர்வாகி ஜெயராஜ் இஸ்ரவேல் தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத்திடம் புகார் தெரிவித்தார். உடனடியாக அந்த சங்கத்திற்கு போன் செய்த மாவட்ட ஆட்சியர் உரம் இருக்கிறதா என கேட்க, அவர்கள் உள்ளது என்று பதிலளித்ததும் விவசாயியிடம் உரம் இல்லை என்று கூறிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News

News August 26, 2025

தூத்துக்குடியில் சினிமா பாணியில் திருட்டு

image

தூத்துக்குடி டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணியாற்றி வந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விட்டல் சிங்கேடு கடையில் இருந்து 37 பவுன் (298.400 கிராம்) தங்க கட்டியைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சேலத்தில் வைத்து விட்டலை கைது செய்தனர்.

News August 26, 2025

தூத்துக்குடியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 26, 2025

தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகையில் புகாரளிக்கலாம்

image

தூத்துக்குடி மக்களே, வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் தகுதி வாய்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலம் மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தகுதி அல்லாதவர்கள் மகளிர் உரிமை தொகை பெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால்<> இங்கே க்ளிக் செய்து<<>> அரசுக்கு புகார் தெரிவிக்க முடியும். அதில் உரிமை தொகை பெறும் தகுதியற்ற நபரின் விவரங்களை பதிவிட்டு புகாரளிக்கலாம்.

error: Content is protected !!