News March 29, 2024
கலக்கும் பெரம்பலூர் வீரர்கள்

பெரம்பலூர்: மேலப்புலியூர் கலைசெல்வன்,
ஆதனூர் ஜுவா , மங்கலமேடு அம்பிகா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய மாற்றுத்திறனாளி வீரர்கள் 2024 மார்ச்-30 அன்று நடைபெற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் செல்லவுள்ளனர். இதில் வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன் மற்றும் ஆதனூர் ஜீவா பெரம்பலூர் முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உட்பட பலரிடம் வாழ்த்துகள் பெற்றனர்.
Similar News
News October 19, 2025
பெரம்பலூர்: ரூ.10 மானியம் – ஆட்சியர் அறிவிப்பு

வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மை பொறியல், வேளாண்மை வணிகம் மற்றும் கால்நடைத்துறைகளில் தொழில்திடங்க அரசு ரூ. 10 லட்சம் மானியம் வழங்குகிறது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேளாண் வளாகத்தில் அமைந்து வேளான் வணிகத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
பெரம்பலூர்: மூதாட்டியிடம் 6½ சவரன் தங்க நகை பறிப்பு

அரியலூரை சேர்ந்தவர் சுசிலாதேவி(65), இவர் தனது மகன்களான ஆனந்த்(33), சரவணன்(32) ஆகியோருடன் பெரம்பலூருக்கு வந்துள்ளார். அப்போது, அணுகுசாலை சக்தி நாகரில் சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுசிலாதேவியிடம் 6½ சவரன் தங்க சங்கிலையை பறித்து சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, CCTV காட்சி மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றன்ர்.
News October 19, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!