News February 21, 2025
டிராகன் படம்.. சிம்புவின் One-word ரிவ்யூ

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன்’ படம் நாளை வெளியாகிறது. படம் குறித்து சிம்பு ஒரு வரியில், ‘BlockBuster’ என ட்வீட் செய்துள்ளார். காலேஜ் ஸ்டூடண்ட்டின் கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் அனுபமா, கயடு, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். அஷ்வத் மாரிமுத்துவின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். யாரெல்லாம் பட டிக்கெட் போட்டுடீங்க..?
Similar News
News February 22, 2025
டான்செட் தேர்வு: பிப்.26 வரை அவகாசம் நீட்டிப்பு

M.E., M.TECH., M.PLAN, M.ARCH., படிப்புகளில் சேருவதற்கான CEETA-PG மற்றும் MBA, MCA படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. <
News February 22, 2025
ஷுப்மன் கில்லுக்கு இவ்வளவு சொத்தா!

2025 நிலவரப்படி, ஷுப்மன் கில்லின் நிகர சொத்து மதிப்பு ₹32 கோடிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. BCCI ஒப்பந்தம் மூலம் அவர் ஆண்டுக்கு ₹5 கோடி சம்பளம் பெறுகிறார். IPLல் GT அணிக்காக ₹16.50 கோடிக்கு கையெழுத்திட்டுள்ளார். ஜில்லட், டாட்டா கேபிடல், மை11சர்க்கிள் நிறுவனங்களின் விளம்பர காண்ட்ராக்ட் வருமானமும் வருகிறது. பென்ஸ், ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட சொகுசு கார்களுடன், பஞ்சாப்பில் அதி நவீன வீட்டையும் வைத்துள்ளார்.
News February 22, 2025
2000 ஆண்டுகளாக போராட்டம்: சேகர்பாபு

சிதம்பரத்தில் கனகசபை மீதேறி சாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார். இறைவன் முன், அனைவரும் சமம். இதற்கான சட்டப் போராட்டம், 2,000 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. தரிசனத்திற்கு எந்த வழியாக பக்தர்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.