News March 29, 2024
நாமக்கல்லில் ‘மீறினால் பாயும்’

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியை முன்னிட்டு சமூக வலைதளங்களை பொறுப்பாக பயன்படுத்தி சரியான தகவல்களை பொது மக்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வதந்தி மற்றும் தவறான தகவல்களை பதிவிடுவோர் மற்றும் அவற்றை பகிர்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News October 13, 2025
நாமக்கல் : மாநகராட்சியில் புதிய மேயர் அறை திறப்பு விழா

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி மேயர் அறையை திறப்பு விழா நடைபெற்றது. இதில் எம்பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டு இன்று திறந்து வைத்தார். நிகழ்வில் மாநகராட்சி மேயர் கலாநிதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் உடன் நகர கழக செயலாளர்கள் செ.பூபதி (துணை மேயர்), செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News October 13, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை !

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்டோபர் 13) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 14) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 13, 2025
நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (13.10.2025) இரவு ரோந்துப் பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981 81216, அவசர உதவி எண்: 100. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக திரு. சங்கிலி (94982 10142) நியமிக்கப்பட்டுள்ளார். உட்கோட்ட பகுதிகளுக்கான அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.