News March 29, 2024
திருச்சி பயணிகளுக்கு அறிவிப்பு

திருச்சி ரயில்வே ஜங்ஷன் கோட்ட மேலாளர் அலுவலகம் மக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ரயில் நிலையங்களில் அல்லது ரயிலில் பயணிக்கும் போது பயணிகளுக்கு உண்டாகும் பாதுகாப்பு குறைபாடு, ரயில் நிலையத்தின் மீது புகார் அளிக்க, மருத்துவ உதவி தேவைக்கும், ரயில் தாமதம் குறித்து ரயில் மீது கம்ப்ளைன்ட் என அனைத்து பிரச்சனைகளுக்கும் 139 எண்ணை அழைத்து தீர்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 15, 2025
கிருஷ்ண ஜெயந்தி விழா: ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை உறியடி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (செப்.,16) இரவு கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி நடைபெற உள்ளது. அன்று காலை 7:15 – 9 மணி வரை கிருஷ்ணர் சித்திரை வீதிகளில் எண்ணைய் விளையாட்டு காண்கிறார். மதியம் 3 மணிக்கு நம்பெருமாள், யாதவர் மண்டபத்தில் சிறப்பு திருவாராதனம் காண்பார். மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு தெற்குவாசல் பாதாளகிருஷ்ணன் கோயிலில், உறியடி நடைபெற உள்ளது.
News September 15, 2025
திருச்சி: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 15, 2025
திருச்சி: தந்தையை தாக்கிய மகன் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கீழ பொய்கைப்பட்டியை சேர்ந்தவர் கோபால் (56). இவரது மகன் சிவா. இருவருக்குமிடையே கடந்த செப்.09 அன்று பண பரிவர்த்தனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவா தனது தந்தையை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மணப்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இதையடுத்து புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சிவா மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.