News March 29, 2024

ராம்நாடு: தேர்தல் விதிமுறைகளை மீறிய திமுக 

image

திருவாடானை தாலுகா காரங்காடு மற்றும் நம்புதாளையில் இன்று திருவாடனை சட்டமன்ற தொகுதியில் தாசில்தார் ஸ்ரீதர் மாணிக்கம் தலைமையிலான சப் -இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊனப்பட்டிருந்த தி.மு.க. கொடிக்கம்பங்களை அதிரடியாக அகற்றினர்.

Similar News

News November 7, 2025

இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு

image

இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அவர் தற்போது பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். இதையடுத்து தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரெஜினி நேற்று இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்று கொண்டார்.

News November 7, 2025

ராம்நாடு: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

image

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News November 7, 2025

இராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கசென்ற மீனவர்களை கடந்த அக். 9 நள்ளிரவு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 30 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் 26 மீனவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டதால் தலா ரூ.2.50 லட்சம் அபராதமும், 2வது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேருக்கு தலா ரூ.2.75 லட்சம் அபராதம் விதித்தார்.

error: Content is protected !!