News February 20, 2025

108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு 102 சேவையில் சுகாதார ஆலோசனை அதிகாரியாகவும், 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராகவும் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 22ம் தேதி காலை 10 முதல் மதியம் 2 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனை டிபி ஹாலில் நடக்கிறது. அடிப்படை தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம் முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 73388-94971, 8925941108 எண்களை தொடர்பு கொள்ளவும்.

Similar News

News August 17, 2025

மீன்வள உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு!

image

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் 4 மீன்வள உதவியாளர் பணி காலியாக உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன், விண்ணப்பத்தை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம், டேம் ரோடு-1, பவானிசாகர் 638451, போன்: 04295-299261 என்ற முகவரிக்கு ஆக.28ம் தேதி மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும் வகையில் தபால் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

News August 17, 2025

ஈரோடு: தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!

image

ஈரோடு மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் 3 முதல் 6 மாத தையல் பயிற்சி முடித்தவர்கள், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சேவை இல்லங்களில் தையல் பயிற்சி, அரசின் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி முடித்தவர்கள் சமூக நலத்துறை சார்பில், தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில், ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0424-2261405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News August 17, 2025

ஈரோடு: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி அதிகாரி வேலை!

image

அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வங்கி அதிகாரியாக பணியாற்ற சூப்பர் வாய்ப்பு உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!