News February 19, 2025

கண்மாயில் மூழ்கிய சிறுமிகள் – நிவாரணம் அறிவிப்பு

image

இளையான்குடி ஆழிமதுரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயின்று வந்த சிறுமி சோபியா (8) மற்றும் அங்கன்வாடி மையத்தில் படித்து வந்த சிறுமி கிருஷ்மிகா (4) ஆகிய இருவரும் இன்று (பிப்.19) பள்ளியின் எதிர்புறம் உள்ள கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

சிவகங்கையில் நாளை உயர்வுக்குபடி முகாம்!

image

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நாளை ஆக.22 மாணவர்கள் பயன்பெறும் வகையில், 2024-2025 ஆம் ஆண்டில் 10,12ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெறாத மாணவ – மாணவிகளுக்கான “உயர்வுக்குப்படி” முகாம் நடைபெற உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், ஐ டி ஐ, பாலிடெக்னிக் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 21, 2025

சிவகங்கை : 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை <>#இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு நவ.9-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

ஒரு க்ளிக்-ல் சிவகங்கை ஒட்டுமொத்த விபரங்கள்!

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவற்றின் தொடர்பு எண்களோடு தொகுத்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள கல்லூரி பற்றி தெரிந்து கொள்ள <>இங்கு க்ளிக் <<>>செய்து தெரிஞ்சிக்கோங்க… உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!