News March 29, 2024
திருச்சியில் பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

நாடாளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப்குமார் அவர்கள், இன்று நான்கு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆட்சியருடன் பேரணியை தொடங்கி வைத்தனர்.
Similar News
News March 11, 2026
திருச்சியில் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன்- மோடி

NDA பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “சமயபுரம் மாரியம்மன், ரங்கநாதர், மலைக்கோட்டை விநாயகரை வணங்கி உரையை தொடங்கினார். திருச்சியில் உங்கள் முன் இருப்பதை நான் பெருமிதமான தருணமாக கருதுகிறேன். இந்த நேரத்தில் மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன் எனக் கூறினார். மேலும் இதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளார்” எனக் குற்றச்சாட்டினார்.
News March 11, 2026
திருச்சி: திமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் இலக்கு – EPS

திருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய EPS,“தேர்தல் வந்து விட்டால் திமுகவிடம் இருந்து அறிவிப்பு வெளியாவது வழக்கம். நாட்டு மக்கள் திமுகவை நம்ப போவதில்லை. திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கை ஒன்றா?. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைத்தும் திமுகவின் அடிமைகளாக உள்ளன. திமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் இலக்கு, ஸ்டாலின் குடும்ப ஆட்சிக்கு இது இறுதி தேர்தல்” எனக் கூறினார்.
News March 11, 2026
திருச்சி: பொதுக்கூட்டத்தில் பங்கேற்காத தமிழிசை, பொன்னார்

பஞ்சப்பூரில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. தமிழக பாஜக முன்னாள், இந்நாள் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றிருக்க பாஜகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் பங்கேற்காததும், அவர்களது பெயர்கள் மேடையில் அமர்வோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


