News February 19, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு

image

பசூர்- ஊஞ்சலூர் இடையே ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு காரணமாக, பிப்.20, 23, 25, 28 ஆகிய நாட்களில் திருச்சி- ஈரோடு ரயில், கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாட்களில், செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் கரூர் வரை மட்டும் இயக்கப்படும்; மறுமார்க்கத்தில், ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கரூரில் இருந்து புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Similar News

News September 12, 2025

சேலத்தில் தகாத உறவால் நேர்ந்த கொலை?

image

சூரமங்கலத்தை சேர்ந்த விவசாயி செல்லப்பன் (65) கடந்த செப்.6-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கந்தம்பட்டியைச் சேர்ந்த பிரபு (32),தினேஷ் (20),குமரவேல் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதில் பிரபு என்பவர் செல்லப்பன் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகவும்,இதற்கு செல்லப்பன் தடையாக இருந்ததால் கொலை செய்ததாகவும் பரபரப்பு வாக்கு மூலம் வெளியாகியுள்ளது!

News September 12, 2025

சேலம்-கடலூர் ரயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்படுமா?

image

சேலம்-கடலூர் (போர்ட்) பயணிகள் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று சேலம் ரயில்வே கோட்ட உபயோகிப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல், சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக பகல் நேரத்தில் சென்னை ரயில் இயக்க வேண்டும். நடைமேடைகளை அதிகரிக்க வேண்டும், லிஃப்ட் மற்றும் எக்ஸ்லேட்டர்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

News September 12, 2025

சேலம்: டிகிரி போதும் வங்கியில் மேனேஜர் வேலை!

image

▶️அரசு வங்கியான BOB Capital Markets Limited வங்கியில் காலியாக உள்ள 70 Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது ▶️ இதற்கு BA,BSC,BE,B.TECH உள்ளிட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்▶️தங்கள் சுயவிவரக் குறிப்பு (resume), ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை careers@bobcaps.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்▶️SHARE பண்ணுங்க!

error: Content is protected !!