News March 29, 2024
அடுத்தடுத்து மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் ராசிபுரம் அருகே எம்பி சின்ராஜூக்கு சொந்தமான ஆலையில் தேநீர் அருந்திய 15 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லி விழுந்த தேநீரை குடித்ததில் 15 பேர் அடுத்தடுத்து வாந்தி மயக்கமடைந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எம்பியின் ஆலையில் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வரும் PM

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 19-ம் தேதி PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
News November 13, 2025
BREAKING: இபிஎஸ் உடன் மீண்டும் சேருகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீண்டும் இபிஎஸ் உடன் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இணைவார் என்று பேச்சு அடிபட்ட நிலையில், அதிமுகவுக்கு திரும்பினால் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக EPS தரப்பு உறுதியளித்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் வைத்திலிங்கம், நலம் பெற்று திரும்பியதும் அதிமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.
News November 13, 2025
அதிக இன்ஸ்டா ஃபாலோயர்கள் இவங்களுக்கு தான்!

நவீன உலகில் இன்ஸ்டா கிராமத்தில் வாழ்பவர்கள் தான் அதிகம் எனலாம். அந்த இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் கொண்டவர்களின் டாப் 10 பட்டியலை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து, அந்த லிஸ்ட்டை பாருங்க. இந்த டாப் 10 லிஸ்ட்டில் ஒரு இந்தியரும் இல்லை. 16-வது இடத்தில் விராட் கோலி (274.65 மில்லியன்) உள்ளார். நீங்க இந்த லிஸ்ட்டில் இருப்பவர்களில் யார் யாரை ஃபாலோ பண்றீங்க?


