News February 19, 2025

மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகன வரி வசூல்

image

ஈரோடு மாநகராட்சியில் 2024 மற்றும் 2025 காண குடிநீர் வரி, சொத்து வரி, வீட்டு வரி நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும் போது, தினமும் ஒரு வார்டுக்கு ஒரு மொபைல் வாகனம் மூலம் வரி வசூல் செய்யப்படும் எனவும், அந்த வாகனத்திலேயே ரசீது வழங்கப்படும் எனவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

Similar News

News August 18, 2025

தொழில்நுட்பப் பணிக்கான தோ்வு: 1,737 போ் பங்கேற்பு!

image

ஈரோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான, எழுத்துத் தோ்வு ஈரோடு மாவட்டத்தில் காமராஜா் உயா்நிலைப் பள்ளி, சிஎஸ்ஐ ஆண்கள் உயா்நிலைப் பள்ளி, சிக்கய்ய அரசு கல்லூரி போன்ற தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 3208 தேர்வலர்கள் விண்ணப்பித்தனர். இதில் 1,737 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 1,471 போ் தோ்வு எழுதவில்லை.

News August 18, 2025

ஈரோட்டில் முற்றிலும் இலவசம்! APPLY NOW!

image

ஈரோடு மக்களே..தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’5G தொடர்பு தொழில்நுட்ப’ பயிற்சி நமது மாவட்டத்திலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 3652 காலியிடங்கள் உள்ளன. மேலும், இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி. விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> செய்யவும். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 17, 2025

ஈரோடு: இரு சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

image

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூலப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ வாகனம் மோதிய விபத்தில் பவானி நகராட்சி தூய்மை பணியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில் டெம்போவில் வந்த மோகன் மற்றும் வளர்மதி ஆகிய இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!