News February 19, 2025

கால்நடை தடுப்பூசி முகாம் நாளை முதல் துவக்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் துவங்குகிறது. இந்த முகாம் வரும், மார்ச் 19ம் தேதி வரை நடக்கிறது. கறவை மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் கால்நடைகளுடன் முகாமில் பங்கேற்று பயனடைலாம்.

Similar News

News April 21, 2025

கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

image

கள்ளக்குறிச்சியில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலனி தயாரிப்பு பயிற்சி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாளை(ஏப்.22) காலை 10 மணி அளவில் சென்ட்ரல் புட்வேர் ட்ரைனிங் நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம் எனவும் அறிவிப்பு.

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இன்றே (ஏப்.21) கடைசி தேதி என்பதால் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!