News February 19, 2025
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

கீழ்பென்நாத்தூர் ஒன்றியம் கார்ணாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (18) இவர் கல்லூரி முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது மேக்களூர் ஏரிக்கரை சாலை வளைவில் திரும்பும் போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்பென்நாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 21, 2025
புத்திர பாக்கியம் அருளும் வாலீஸ்வரர்

தி.மலை, குரங்கணில் மூட்டலில் அமைந்துள்ளது அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சாமி மீது சூரிய ஒளி விழுகிறது. பாவ விமோசனம் பெற, சனி தோஷம் நீங்க இங்கே வழிபடலாம். திருமணம் முடிந்தவர்களும் கர்ப்பிணி பெண்களும் இங்கு உள்ள அம்பாளுக்கு வளையல் அணிவித்து பின் அதை அணிந்து கொள்கின்றனர். இதன் மூலம் புத்திர பாக்கியமும் சுகப்பிரசவமும் நடக்கும் என்பது நம்பிக்கை.
News April 21, 2025
கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

திருவண்ணாமலையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <