News February 19, 2025

தமிழகத்தில் NEPஐ அனுமதியுங்கள்: சரத்குமார்

image

TNஇல் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். NEPஇல் எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் எனக் குறிப்பிடவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், மாறாக பிற மாநிலங்களில் 3ஆவது விருப்ப மொழியாக மாணவர்கள் தமிழ் மொழியை தேர்வு செய்யவும் NEP வாய்ப்பு வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News September 13, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், தமிழகத்தில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் கனமழை வெளுத்து வாங்குமாம். மேலும், 18-ம் தேதி வரை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கவனமாக இருங்கள்!

News September 13, 2025

இளைஞர்களுக்கு வருகிறது புதிய வேலைவாய்ப்புகள்

image

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த சர்வதேச தமிழ் பொறியாளர் மன்ற மாநாட்டில் DCM உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில், தமிழ்நாடு அரசுக்கும் வெளிநாடுகளில் உள்ள அரசு & தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக DCM தெரிவித்துள்ளார். மேலும், பொறியாளர்களை, தொழில்முனைவோர்களாக உயர்த்தும் வகையில் திமுக அரசு செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

நீங்கள் வேலையில் நீடிக்க இதை செய்தே ஆக வேண்டும்!

image

எதிர்காலத்தில் ஒருவர் வேலையில் இருப்பது மிக சவாலான காரியம் என நோபல் பரிசு பெற்றவரும், DEEP MIND-ன் CEO-வுமான டெமிஸ் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் AI மேம்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தை கணிப்பது கடினமானதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தால்தான் வேலையில் நீடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!