News February 19, 2025
இந்தி மூலம் தாய்மொழியை சிதைத்துவிட்டனர்: திருமா

இந்தியா முழுவதும் ஒரே ஒரு மொழி பேசும் நிலையை உருவாக்கவே மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிப்பதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டினார். தமிழை பிராந்திய மொழி என்றும், இந்தியை இந்தியாவின் மொழி என்றும் கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம் எனக் கூறிய அவர், இந்தியும் பிராந்திய மொழிதான் என்று தெரிவித்தார். மேலும், இந்தி மூலமாக பல மாநிலங்களின் தாய்மொழிகளை அவர்கள் சிதைத்து விட்டதாகவும் திருமாவளவன் சாடினார்.
Similar News
News September 13, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், தமிழகத்தில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் கனமழை வெளுத்து வாங்குமாம். மேலும், 18-ம் தேதி வரை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கவனமாக இருங்கள்!
News September 13, 2025
இளைஞர்களுக்கு வருகிறது புதிய வேலைவாய்ப்புகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த சர்வதேச தமிழ் பொறியாளர் மன்ற மாநாட்டில் DCM உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில், தமிழ்நாடு அரசுக்கும் வெளிநாடுகளில் உள்ள அரசு & தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக DCM தெரிவித்துள்ளார். மேலும், பொறியாளர்களை, தொழில்முனைவோர்களாக உயர்த்தும் வகையில் திமுக அரசு செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
நீங்கள் வேலையில் நீடிக்க இதை செய்தே ஆக வேண்டும்!

எதிர்காலத்தில் ஒருவர் வேலையில் இருப்பது மிக சவாலான காரியம் என நோபல் பரிசு பெற்றவரும், DEEP MIND-ன் CEO-வுமான டெமிஸ் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் AI மேம்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தை கணிப்பது கடினமானதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தால்தான் வேலையில் நீடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.