News February 18, 2025

இராமநாதபுரம்: வழிவிடு முருகன் கோயில் வரலாறு தெரியுமா?

image

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் இருக்கும் இடத்தில் ஒரு அரசமரம் இருந்தது. அந்த மரத்திற்கு கீழாக ஒரு வேல் நடப்பட்டு அதற்கு பூஜையும் செய்யப்பட்ட வந்தது.இதற்கு அருகாமையிலேயே நீதிமன்றமும் இருந்துள்ளது.நீதிமன்ற விசாரணைக்கு வருபவர்கள் தங்களது வழக்கு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கியவர்கள் இந்த முருகனை வழிபட்டு வாழ வழி பெற்றதால் வழிவிடு முருகன் என பெயர் பெற்றது.

Similar News

News April 21, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.21) முதல் மூன்று நாட்களுக்கு மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பிற்பகல் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் குறிப்பாக பரமக்குடி, அபிராமம், கமுதி, பார்த்திபனூர், முதுகுளத்தூர் மேற்கு பகுதி, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

இராமநாதபுரம் பெண்கள் கவனத்திற்கு

image

இராமநாதபுரம்: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

பக்ரைன் நாட்டில் உயிரிழந்த இராம்நாடு மீனவர்

image

பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்த சீமோசன்(33) என்பவர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்ரைன் நாட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு செல்சியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது மனைவி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!