News February 18, 2025

அத்துமீறும் பாகிஸ்தான்: உஷார் நிலையில் இந்தியா

image

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலால் இந்திய எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. J&K-ன் பீர் பாஞ்சால் எல்லை வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தானின் பார்டர் ஆக்‌ஷன் டீம் (BAT)10 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக கிருஷ்ணா காட்டி பகுதியில் தொடர் ஊடுருவல் முயற்சி நடந்தது. இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து முறியடித்துள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

Similar News

News September 13, 2025

ரயிலில் இருந்து ஃபோனை தவறவிட்டா என்ன செய்றது?

image

உங்கள் ஃபோன் விழுந்த இடத்தில் இருக்கும் கம்பத்தின் எண்ணையும், எந்த ஸ்டேஷனில் உங்கள் ஃபோன் விழுந்தது என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உடனடியாக Railway Helpline-க்கு (182, 139) தொடர்பு கொண்டு இதை தெரிவித்தால் ரயில்வே போலீசார் உங்களுடைய ஃபோனை மீட்டுவிடுவர். பிறகு அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் ஃபோனை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த முக்கியமான தகவலை பிறருக்கு SHARE செய்யுங்கள்.

News September 13, 2025

விஜய்க்கு எதிராக டிரெண்டாகும் #சனியின்_பயணம்

image

திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்கியுள்ள நிலையில், தவெகவினர் திரளாக பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தொண்டர்கள் வெள்ளத்திற்கு இடையே ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை பகுதிக்கு விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்கிறது. இதனிடையே, விஜய்க்கு எதிராக ஒருதரப்பினர் #சனியின்_பயணம் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம், #தமிழகவெற்றிக்கழகம் ஹேஷ்டேக்கும் டிரெண்டாகிறது.

News September 13, 2025

நேபாள் அமைதிக்கு இந்தியா உறுதுணை: PM மோடி

image

நேபாளத்தில் நடந்த Gen-z போராட்டத்தின் போது, அந்நாட்டின் பிரதமர் ராஜினாமா செய்ததால், இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் சுஷிலா கார்கிக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!