News February 18, 2025
பாமாயில், பருப்பு விலை கிடுகிடு உயர்வு

பாமாயில், உளுந்தம் பருப்பின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் பாமாயில் 15 கிலோ ₹2,130க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் டின் ₹2,180க்கு விற்பனையாகிறது. அதேபோல், உளுந்தம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ₹11,200க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ₹11,500க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில் சிகப்பு மசூர் பருப்பும், பாசிப் பருப்பும் மூட்டைக்கு தலா ₹200 வரை குறைந்துள்ளது.
Similar News
News March 19, 2026
FLASH: தங்கம் விலை ₹15,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

தங்க நகைப் பிரியர்களுக்கு மார்ச் மாதம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இம்மாதத்தில் மட்டும் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹15,000 குறைந்துள்ளது. மார்ச் 1-ம் தேதி ₹1,26,200 ஆக இருந்த 1 சவரன், தற்போது ₹1,11,200-க்கு விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு மேலும் ₹10,000 வரை விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சற்று பொறுமை காப்பது நல்லது!
News March 19, 2026
மெத்தனப்போக்கில் திமுக அரசு: அண்ணாமலை

<<19356260>>விளாத்திகுளம் கொடூரம் <<>>பற்றிய உண்மையை மக்களுக்கு CM ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தனது X பதிவில், கைதாகியுள்ள <<19424645>>தர்ம முனீஸ்வரன்<<>> ஒரு ஆயுள் தண்டனை குற்றவாளி என்றும், அவருக்கு SC-ல் ஜாமின் கிடைக்கும் அளவுக்கு திமுக அரசு வழக்கை மெத்தனமாக கையாண்டிருப்பதாகவும் சாடியுள்ளார். ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளியை TN போலீஸ் கண்காணிக்க தவறியதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 19, 2026
தமிழக தேர்தல்.. அதிரடியாக மாற்றம் செய்தது ECI

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றங்களை ECI அறிவித்துள்ளது. அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகம், மின் வாரியம், போக்குவரத்து காவல், சிறைத்துறை, தீயணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய அரசுத் துறை ஊழியர்களும் இனி தபால் மூலம் வாக்கு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


