News February 18, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்; மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் வரும் 20ஆம் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு கீழ்வேளூர் மற்றும் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News March 10, 2026
நாகை: திமுக மாநாட்டிற்கு சென்ற பஸ் விபத்து

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக சார்பில் 12-வது மாநில மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிலையில் நாகூரில் இருந்து திருச்சி நோக்கி திமுக தொண்டர்களுடன் சென்ற தனியார் மினி பஸ் ஒன்று தஞ்சை மாவட்டம் விளார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
News March 10, 2026
நாகை: சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

நாகை மாவட்டம், வேதாரணியம் அடுத்த செம்போடை தெற்கு கடைத்தெருவில் நேற்று கடலை மூட்டை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த மின்கம்பம் உடைந்தது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவர்ந்து வாகன கவிழ்ந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.09) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


