News February 18, 2025
தபால் நிலையங்களில் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆதார் அட்டை புதுப்பித்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை தற்போது நெல்லையிலும் உள்ளது. தகுதியானவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News September 18, 2025
நெல்லை: தார் பீப்பாய்களை திருடிய வாலிபர்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாலேசமங்கலம் பகுதியில் ரோடு போடுவதற்காக ஏராளமான தார் பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த சில தனங்களுக்கு முன்பு 58 தார் பீப்பாய்கள் காணாமல் போனது. இதுக்குறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த ஷேக் மைதீன் என தெரியவந்தது. இதையடுத்து திருச்சூர் போலீசார் ஷேக் மைதீனை கைது செய்தனர்.
News September 18, 2025
நெல்லை இளைஞர்களே நீங்க எதிர்பார்த்த நாள்!

நெல்லை மாவட்டத்தில் நாளை செப்.19 காலை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் சிதம்பரம் நகர், பெருமாள்புரத்தில் நடைபெற உள்ளது. . சம்பளம் தகுதிக்கேற்ப 50,000 – 15,000 வரை வழங்கபட உள்ளது. 355க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு காத்து கொண்டு உள்ளது. SO நாளைக்கு MISS பண்ணிடாதீங்க.. இங்கு <
News September 18, 2025
அம்பையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஊதிய தாமதத்தைக் கண்டித்து (செப். 17) அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகராட்சி ஆணையர் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தி, அன்றே ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், இனி ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்ததால், பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.