News February 18, 2025
ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன்: CM ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன்பெற CM ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டத்தின்படி, தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை 30% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். மீதமுள்ள தொகையை 3% வட்டியுடனும் திருப்பி செலுத்தலாம். விருப்பமுள்ளோர் exwel.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 13, 2025
யார் இந்த சுஷிலா கார்கி?

நேபாளின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள சுஷிலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் PM ஆவார். * இவர் 2016-ல் நேபாள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக செயல்பட்டவர். * பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவர். * 1990-ல் சிறை தண்டனை அனுபவித்தவர். * நேபாளில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு குடியுரிமை தருவது தொடர்பான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியவர்.
News September 13, 2025
FIRST LOVE: மறக்க முடியாமல் தவிக்கும் ஆண்கள்

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரும்பாலானோர் இன்னமும் தங்கள் முதல் காதலை நினைத்துக் கொண்டிருப்பதாகவும், 10-ல் 4 பேர், சமூக வலைதளங்கள் உதவியுடன் மீண்டும் முதல் காதலோடு தொடர்புகொண்டு (அ) இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 10-ல் 4 பேரில் குறிப்பாக ஆண்கள் இன்னும் பழைய காதல் நினைவுகளை சுமப்பதாகவும் பதிலளித்துள்ளனர். உங்களுக்கு எப்படி?
News September 13, 2025
லோகேஷ் – அமீர்கான் படம் கைவிடப்பட்டதா?

லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் இணைந்து பணியாற்றவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சித்தாரே ஜமீன் பர்’ பட நிகழ்ச்சியில் அமீர்கான், லோகேஷ் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறினார். ஆனால் தற்போது கமல் – ரஜினி படம், கைதி 2-ல் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார். அமீர்கான் உடனான படம் கைவிடப்பட காரணம் என்ன? தேதிகள் பிரச்னையா என உறுதியான தகவல் தெரியவில்லை.