News March 29, 2024

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

image

சின்னமனூர் நகராட்சியில் சொக்கநாதபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் என மூவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 4, 2025

தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி!

image

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04546262112 அணுகலாம். SHARE பண்ணுங்க

News November 4, 2025

தேனி: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நகர்புற வாழ்வாதார இய்க்கம் ஆகியவை சார்பில் வருகிற நவம்பர் 8 ந் தேதி கொடுவிலார் பட்டியில் உள்ள கம்மவார் சங்க மெரிக் கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்து உள்ளார். வேலைநாடும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஷேர் செய்யுங்க.

News November 4, 2025

தேனி: தகராறில் ஒருவருக்கு கத்தி குத்து

image

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ராமசாமி (45). மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் முருகன், ராமசாமியின் கழுத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் முருகன் மீது வழக்கு (நவ.3) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!