News February 17, 2025
நாமக்கல்: 3-ம் கட்டமாக 60 முகாம்கள் நடத்த உத்தரவு

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் 3-ஆம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 21.02.25 முதல் 13.03.25 வரை நாமக்கல் மாவட்டத்தில் 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை முத்துக்காளிப்பட்டி, கார்கூடல்பட்டி, திருமலைப்பட்டி, வீசாணம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 16, 2025
நாமக்கல்: இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 16.09.2025 செவ்வாய்க்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்: நாமக்கல் மாநகராட்சி அரசு துவக்கப்பள்ளி, திருச்செங்கோடு நகராட்சி தனியார் திருமண மண்டபம், காளப்பநாயக்கன்பட்டி தனியார் திருமண மண்டபம், பள்ளிபாளையம் கலைவாணி திருமண மண்டபம், பரமத்தி சமுதாய நலக்கூடம், ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 16, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் நேற்று (செப்டம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் மூலம், ஒரு முட்டையின் விலை ரூ. 5.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முட்டையின் விலை ரூ.5.20 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 16, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.15 நாமக்கல்-( தங்கராஜ்-9498110895 ) ,வேலூர் -( சுகுமாரன்- 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன்- 9498169092), திம்மநாயக்கன்பட்டி -( ஞானசேகரன் -9498169073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.