News February 17, 2025
தமிழ்நாடு பசுமை சார்பு விருது விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சார்பின் விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் WWW.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இன்று செய்தி வெளியிட்டுள்ளார்
Similar News
News November 12, 2025
தென்காசி கிணற்றில் கிடந்த பச்சிளம் குழந்தை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடி கிராமத்தில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை இன்று உயிரிழந்த நிலையில் கிணற்றில் மிதந்தது.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அய்யாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 12, 2025
தென்காசியில் சிறப்பு அரசு பள்ளிகள் தேர்வு

தமிழக கல்வித் துறை சார்பாக 2024-2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நெடுவயல் சிவசைல நாதா நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14 பள்ளி கல்வித்துறை அமைச்சரால் விருது வழங்கப்பட உள்ளது.
News November 12, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.


