News February 17, 2025
கோயில் குளத்தில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு

சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் (40) என்பவர் இன்று அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோயில் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது கால் தவறி வழுக்கி குளத்தில் விழுந்ததில், மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
Similar News
News October 21, 2025
ராணிப்பேட்டை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

ராணிப்பேட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News October 21, 2025
ராணிப்பேட்டை: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 21, 2025
ராணிப்பேட்டை: காவல்துறையில் வீர வணக்கநாள் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (அக்.21) காவலர் வீர வணக்க நாளை சிறப்பாகக் கொண்டாடினர். கடமையில் உயிர்நீத்த வீர காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காவல் நிலைய வளாகத்தில் மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டது. பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பலர் பங்கேற்று வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.