News February 17, 2025

மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் இல்லை: உதயநிதி

image

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி தருவோம் என மத்திய அரசு மிரட்டிப் பார்ப்பதாகவும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைசி வரையிலும் பின்பற்றப்படும் எனவும் உறுதியளித்தார். மொழி திணிப்பை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 17, 2026

ராசிபுரத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிரடி தீர்ப்பு

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டன் சூர்யா மற்றும் பிரபு ஆகிய மூவர் மீது ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு நாமக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மூவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ 1000 அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அது தீர்ப்பை வெளியிட்டுள்ளது

News March 17, 2026

கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

image

CPI-யின் மதூர் சத்யா மீதான பாலியல் புகார் தொடர்பாக கட்சி தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்தனர். இதன்பின், மதூர் சத்யாவை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். AIYF, ISCUF அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த பாலியல் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

News March 17, 2026

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய App அறிமுகம்

image

SUVIDHA 2.0 என்ற புதிய செயலியை ECI அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவை ஆன்லைனிலேயே தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் பற்றி ECI விரிவாக விரைவில் தெளிவுபடுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், மக்களைக் கவரும் நோக்கில் நேரடியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்வதையே வேட்பாளர்கள் விரும்புவர் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!