News February 17, 2025

தாது மணல் கொள்ளை வழக்கில் என்று தீர்ப்பு

image

குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 2015-ல் தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து 2016 முதல் விசாரித்து வந்தது. வி.வி.மினரல், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட், பீச் சேண்ட் மைனிங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

Similar News

News March 7, 2026

திருநெல்வேலி: வாடகை வீட்டில் இருப்போர் தெரிந்து கொள்ளவும்

image

நெல்லை மக்களே; நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000476, 9445000478, 9445000477 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க.

News March 7, 2026

நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

image

நாங்குநேரி அருகே பெரும்பத்து பஜாரில் கடந்த 2ம் தேதி இரவு 3 பைக்குகளில் வந்த கும்பல் ரோட்டின் அருகே டீக்கடையில் நின்ற மக்களை சரமாரியாக அறிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மஞ்சள் குளத்தை சேர்ந்த மகாராஜன் என்பவரை தற்போது போலீசார் கைது செய்தனர்.

News March 7, 2026

தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!