News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 24, 2025

கரூரில் போலீசுக்கு பயந்து கலசத்தை வீசிச் சென்ற திருடர்கள்!

image

கரூர் மாயனூர் அருகே சங்கரேஸ்வரர் கோவிலில் கடந்த வாரம் திருடப்பட்ட கலசத்தை, மர்ம நபர்கள் நேற்று அருகில் உள்ள வயல் காட்டில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து திருடர்கள் இவ்வாறு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News December 24, 2025

கரூர்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

கரூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News December 24, 2025

அரவக்குறிச்சியில் வசமாக சிக்கிய இருவர்!

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி பிரிவு அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற அரவக்குறிச்சி போலீசார் லாட்டரி விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (50) மற்றும் பாண்டியன் (52) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!