News February 17, 2025
மின்சார வயரில் உரசியதில் சரக்கு வேன் எரிந்து சேதம்

அரியலூர் மாவட்டம், சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான சரக்கு வேனில் வைக்கோல்களை ஏற்றிக்கொண்டு, குணமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் பாதையில் குறுக்காக சென்ற மின்சார ஒயரில் வேனிலிருந்த வைக்கோல்கள் உரசியதில் தீப்பற்றி எரிய தொடங்கின. இதனால் வேனின் ஓட்டுநர் தீயை அணைப்பதற்கு முயன்றும் தீ மளமளவெனப் பரவி பற்றி எரிந்து வேன் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
Similar News
News March 10, 2026
அரியலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.
News March 10, 2026
அரியலூர் விவசாயிகளுக்காகக் குளிர்பதன கிடங்கு!

அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை விளைப் பொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் மூலம் அதிநவீன குளிர்பதன கிடங்கு அரியலூர், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள்,அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுகொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.


