News March 29, 2024
சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

போடியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனா். வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News March 14, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 13.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 13, 2026
தேனி: மனைவி உள்ளிட்ட இருவருக்கு இரட்டை ஆயுள்

போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் ஹபிபுல்லா மனைவி அனீஸ் பாத்திமா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்த ஹபிபுல்லாவை 2019-ம் ஆண்டு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் ஜெயபாண்டி, அனீஸ் பாத்திமா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை நீதிபதி தீர்ப்பளித்தார்
News March 13, 2026
தேனி: துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தங்களது துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் பகுதிகளில் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் துப்பாக்கியை உடனடியாக ஒப்படைக்க வேண்டு எனவும் தெரிவித்துள்ளனர்.


