News February 17, 2025
ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு, அடுத்த மார்ச் மாதம் 6ஆம் தேதி குறைத்தீர் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை இரட்டை பிரதிகளில் தயார் செய்து இம்மாதம் 18ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 22, 2025
குன்னூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை, மின்னு நுகர்வோர் குறைதீர் கூட்டம், செயற்பொறியாளர் சேகர் தலைமையில் நடைபெற உள்ளது. குன்னூர் நகரம் , எடப்பள்ளி, எடக்காடு, கோத்தகிரி நகரம், நெடுகுலா, அரவேணு, உபதலை குந்தா, சேலாஸ் வெஸ்ட் புரூக், ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
BREAKING: நீலகிரி இளைஞர் தவெக மாநாட்டில் பலி!

மதுரையில் இன்று நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். அதிக வெயில், கூட்ட நெரிசலால் மயக்கமடைந்த ரோஷனுக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News August 21, 2025
நீலகிரி: உள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரியில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Development manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <