News March 29, 2024
அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது

வலி நிவாரணிகள், தொற்று நோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் சிறிய அளவில் உயர உள்ளது. முந்தைய ஆண்டுகளில் 10 -12% வரை விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இம்முறை விலை உயர்வு சதவீதம் சற்று குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, மொத்த விற்பனை விலை குறியீட்டிற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விடுகின்றனர்: OPS

அதிமுக ஒன்றுபட வேண்டுமென 2 கோடி தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர் என OPS கவலை தெரிவித்துள்ளார். சொந்த விருப்பு, வெறுப்பாக கட்சி ஒன்றுபடுவதை தடுக்கிறார் என்றும், அதிமுக ஒன்றுபட வேண்டுமென PM மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதியை மாற்றியவர் தான் EPS என்று OPS சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் சேர எந்த பதவியையும் கேட்கவில்லை என்று பேசியுள்ளார்.
News November 8, 2025
பைசனை போற்றிக் கொண்டாட வேண்டும்: சீமான்

‘பைசன்’ வெறும் பொழுதுபோக்கு படமல்ல, போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்த படம் என்று சீமான் பாராட்டியுள்ளார். பைசனை பார்த்த போது ஒரு திரைப்படம் கண் முன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வே வரவில்லை என்றும், சக மனிதர்களின் வாழ்வியலாகவே கதைக்களம் முழுவதும் மனம் ஒன்றிப்போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘பைசன்’ படத்தால் துருவ் விக்ரமின் ரசிகனாகவே மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 8, 2025
போலி வாக்காளர்களை சேர்த்த திமுக அரசு: தமிழிசை

1947-ல் இருந்து 8 முறை நடந்த SIR பணிகளை எதிர்க்காத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது PM மோடியின் ஆட்சியில் மட்டும் எதிர்ப்பது ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். SIR பணிகள் மூலம் 2 ஆண்டுகளாக திமுக அரசு சேர்த்த போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்றும், அந்த அச்சத்தில் தான் அவர்கள் எதிர்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார். SIR-க்கு எதிராக போராடுவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று அவர் கூறியுள்ளார்.


