News February 17, 2025
காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை குறைதீர்ப்பு முகாம்

புதுச்சேரி ஆளுநர் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை 17/02/2025 (திங்கட்கிழமை) மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் வளாகத்தில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 1, 2025
புதுவையில் நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

சென்னை, வியாசர்பாடி கார்த்திக், தொழிலாளி. வேளாங்கண்ணியில் கொடியேற்றம் முடிந்து, நண்பர்களுடன் புதுவைக்கு வந்தார். அங்கிருந்து ஆரோவில் குயிலாப்பாளையம் தனியார் கெஸ்ட் அவுசில், 9 பேரும் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் அங்குள்ள நீச்சல் குளத்தில் நண்பர்கள் அனைவரும் குளித்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கார்த்திக் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News September 1, 2025
புதுச்சேரி: துணை தாசில்தார் தேர்வு

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 30 துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த மே 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இப்பணிக்கு மொத்தம் 37,349 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் போட்டித்தேர்வு 101 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மையங்களில் தொடங்கி நடைபெற்றது. இத்தேர்வினை 37,349 பேர் எழுதினார்கள்.
News September 1, 2025
புதுவையில் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் மேக வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க எச்சரிக்கை வீடுகளை விட்டு வெளியேறும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.