News February 17, 2025
காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை குறைதீர்ப்பு முகாம்

புதுச்சேரி ஆளுநர் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை 17/02/2025 (திங்கட்கிழமை) மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் வளாகத்தில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
புதுச்சேரியில் தீபாவளி மதுபான விற்பனை சரிவு

புதுவையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை அதிகளவில் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மதுபான விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு கடந்த 3 மாதம் முன்பு அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் வரியை உயர்த்தியதே காரணம் என கூறப்படுகிறது.
News October 23, 2025
புதுச்சேரி: அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, அனைத்து துறைகளின் அறை எண்களை அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் அவற்றை பின்பற்றி தங்கள் இருப்பிட பகுதிகளில் மழையினால் ஏற்படும் பிரச்சினைகளை அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு (கட்டணமில்லா தொலைபேசி எண்கள்) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
புதுச்சேரி: கடந்தாண்டை விட 45% மாசு குறைவு

தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்ட நிலையில், மாசு கட்டுப்பாட்டு குழுமம் பதிவு செய்த காற்று மாசுபாடு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை மாசு, கடந்தாண்டை விட 45 சதவீதம் குறைந்ததுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தீபாவளியின் போது உருவாகும் காற்று மற்றும் ஒலி மாசுவை அளவீடு செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.